பெட்ரோல், டீசல் & அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடியாக உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்!
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. அந்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பணவீக்கம்:
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலை ஏற்பட்டது. கடைகள், வணிக வளாகங்கள் போன்றவைகள் இயங்காததால் பொருளாதாரம் சரிவடைய தொடங்கியது. ஏற்கனவே மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வேலையிழந்து தவிக்கும் நிலையில் பண வீக்கத்தால் ஏற்படும் விலைவாசி உயர்வு பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
குறிப்பாக இலங்கை மீண்டு வர முடியாத அளவுக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. எரிவாயு, எரிபொருள் வாங்க அந்நிய செலாவணி இல்லாததால் இலங்கையில் பல மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை அரசுக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை தொடர்ந்து பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.204.15 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
பணவீக்கத்தால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்துள்ளது அதனை தொடர்ந்து பிற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. லை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.