நாடு முழுவதும் ஊரடங்கு நாளை வரை நீட்டிப்பு – இலங்கை அரசு அறிவிப்பு! தொடரும் போராட்டங்கள்!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் ராஜபக்சே அரசுக்கு எதிராக வரலாறு காணாத புது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜபக்சே ஆதரவாளர்கள் மக்கள் மத்தியில் பிரச்சனையை கிளப்பி இலங்கை முழுவதும் கலவரமான சூழ்நிலை எழுந்துள்ளது.
மெகா போராட்டம்:
இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வளவு கஷ்டமான சூழ்நிலைக்கு இலங்கையில் ஆளும் ராஜபக்சே குடும்பமே காரணம் என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் மறுபக்கம் அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை அதிபர் மாளிகை எதிரே லட்சக்கணக்கில் மக்கள் குவிந்து பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – பயனர்கள் சந்திக்கும் சவால்கள் இவைகள் தான்?
இந்நிலையில் போராட்டகாரர்களின் கூராடங்களுக்கு ராஜபக்சே ஆதரவாளர்கள் தீ வைத்த நிலையில், பொது மக்கள் பதில் தாக்குதல் நடத்தினர். அதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 150க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தாக்குதல் நடத்த சிறைக்கைதிகளை கூட்டிக் கொண்டு வந்ததாக மக்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர். பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் பல அரசியல் தலைவர்களின் வீடுகளை முற்றுகையிட்டனர்.
Exams Daily Mobile App Download
ஆளும் கட்சி எம்பிக்கள், மேயர், பல அரசியல் பிரமுகர்களின் வீடுகள், ஹோட்டல்கள், சொகுசு கார்கள் என அனைத்தையும் மக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அதிபரின் மாளிகைக்குள் 1000 பேர் நுழைய முயற்சித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மக்களை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் காரை வழிமறைத்து தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் மக்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் நாடு தழுவிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.