நாட்டில் மே 2ம் தேதி பொது விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
ரம்ஜான் மாதம் ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை உள்ளது. இந்த ஆண்டு ரம்ஜான் தினமாக மே 2ம் தேதி அன்று அல்லது 3ம் தேதி அன்று பிறை தெரியும் நாள் அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் மே 2ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் தினம்
உலகம் முழுவதும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து அந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய மூன்றாம் பிறை அன்று புனித ரமலான் தினமாக கொண்டாப்பட்டு வருகிறது. அத்துடன் 3ம் பிறை தெரிவதை பொறுத்து இஸ்லாமியர்களால் ரம்ஜான் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இஸ்லாமியர்களின் நாட்காட்டியின்படி ரம்ஜான் மாதம் ஏப்ரல் 3ம் தேதி முதல் தொடங்கி மே 2ம் தேதி வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். அத்துடன் 3ம் பிறை வருகிற மே 2ம் தேதி அன்று அல்லது மே 3ம் தேதி அன்று தோன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – கிடுக்கிப்பிடி உத்தரவு!
மேலும் இந்திய நாட்டில் மே 2ம் தேதி அன்று 3ம் பிறை தோன்றும் எனவும் அந்நாளில் தான் ரம்ஜான் தினமாக கொண்டாடப்பட 99% வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் பிறை தெரியக் கூடிய ஒரே நாளில் தான் ரம்ஜான் தினம் கொண்டாடப்படும் அல்லது அந்தந்த பகுதிகளில் தோன்றும் பிறை நிலவை பொறுத்து ரம்ஜான் தினம் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் வழக்கமாக தொழுகையை மசூதியில் நடத்துவார்கள். ஆனால் ரமலான் பண்டிகையின் போது மசூதியில் அல்லது ஒரு பெரிய திடலில் இஸ்லாமியர்கள் கூடி தொழுகை நடத்தி சிறப்பாக கொண்டாடுவார்கள்.
Exams Daily Mobile App Download
பிறரின் கஷ்டத்தையும், பசியையும் உணர்வதே ரமலான் நோன்பின் முக்கியத்துமாக கருதப்படுகிறது. அதனால் இந்த நாளில் ஏழை, எளியோருக்கு உணவை பகிர்வதும், அத்துடன் இல்லாதவர்களுக்கு பொருள் கொடுத்து உதவுவார்கள். இந்த தினத்தை முன்னிட்டு இலங்கையில் மே 2ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என்று இதனை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி அறிவித்துள்ளார். இந்த வருடம் இந்த ஆண்டு தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அன்று திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதன் காரணமாக அடுத்த நாள் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.