தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சல் – நோயாளிகளால் நிறையும் மருத்துவமனை.. பொதுமக்கள் அச்சம்!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மக்கள் அதிகம் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த மர்ம காய்ச்சல் மக்கள் மத்தியில் ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம காய்ச்சல்:
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் குளிர் அதிகம் நிலவுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இன்புளுயன்சா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இதனை தடுக்க மாநில சுகாதாரத்துறை போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மக்களுக்கு மர்ம காய்ச்சல் அதிகம் பரவுவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. அதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
Exams Daily Mobile App Download
மேலும் இந்த மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக உடல் வலி, சளி, இருமல், தீராத காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகிறது. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும் மக்கள் இந்த கால நிலை மாற்றத்தின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆற வைத்த தூய்மையான நீரை பருகுவது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.