மத்திய அரசு நிறுவனத்தில் 10 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகத்தின் (SPMCIL) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Technician மற்றும் Fireman பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Security Printing Press, Hyderabad |
பணியின் பெயர் | Junior Technician and Fireman |
பணியிடங்கள் | 27 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SPMCIL காலிப்பணியிடம்:
SPMCIL நிறுவனத்தில் தற்போது Junior Technician பதவிக்கு 25 இடங்களும் , Fireman பதவிக்கு 02 இடங்கள் என மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SPMCIL கல்வித் தகுதி:
ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Junior Technician பதவிக்கு I.T.I மற்றும் Fireman பதவிக்கு 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
SPMCIL வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
SPMCIL ஊதிய விவரம்:
இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18,780/- முதல் ரூ.67,390/- வரை ஊதிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SPMCIL தேர்வு முறை:
இந்த பணிக்கு எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். மேலும் இந்த எழுத்து தேர்வு OBJECTIVE TYPE வடிவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
SPMCIL விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணமாக SC / ST மற்றும் PWD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.200/- General, EWS மற்றும் OBC பிரிவினர்களுக்கு ரூ.600/- வசூலிக்கப்படும்.
SPMCIL விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், நாங்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தி அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம். மேலும் 15.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.