தமிழக பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் – UGC புதிய உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் அந்தந்த மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கையை மாநில அரசுகள் எடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதை அதிகரிக்க செய்யும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
ரூ.67000/- ஊதியத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்
இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் யுஜிசி செயலர் ரஜினிஷ் வெளியிட்ட அறிக்கையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த பல்கலைக்கழக நிர்வாகங்களும், கல்லூரி நிர்வாகங்களும் செய்ய வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கல்வி நிறுவன அலுவலர்களை, ஆசிரியர்கள், ஊழியர்கள் , மாணவர்கள் ஆகியோரை பூஸ்டர் செலுத்திக் கொள்ள ஊக்குவிப்பதோடு அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.