ரயில்வே தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் இயக்கம்!

0
ரயில்வே தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு - சிறப்பு ரயில்கள் இயக்கம்!
ரயில்வே தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு - சிறப்பு ரயில்கள் இயக்கம்!
ரயில்வே தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இந்தியாவில் ரயில் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் இந்திய ரயில்வே வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது ஜூன் 15 முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

சிறப்பு ரயில்

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப RRB தேர்வு குறித்த அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டது. அதன்படி இத்தேர்வு ஜூன் 15,16,17 உள்ளிட்ட நாட்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்குரிய தேர்வு நுழைவு சீட்டு கடந்த வாரத்தில் வெளியானது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களும் RRBயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

PM – KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – ஜூலை 15 கடைசி நாள்!

இதனை தொடர்ந்து தேர்வர்களுக்கு தொலைதூரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் உதவும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், தேர்வர்களின் நலனுக்காக கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் திருவனந்தபுரம் – மைசூர் சிறப்பு விரைவு ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 13ம் தேதி அன்று இரவு 10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 8 மணிக்கு மைசூரு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் இந்த ரயில் மைசூரில் இருந்து ஜூன் 17ம் தேதி அன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும் என்றும் இந்த ரயில் கோலாபூரில் இருந்து ஜூன் 17ம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொச்சுவேலியில் ஜூன் 13ம் தேதி அன்று இரவு 9.25 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு மங்களூரை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மங்களூரில் இருந்து ஜூன் 17ம் தேதி இரவு 11 மணிக்கு அன்று புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.30 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும் என்று ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!