தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் நேரம் மாற்றம் – அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் பெரும்பாலான சிறப்பு ரயில்கள் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டு அதற்கான நேர அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் நேரம் மாற்றம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் தேவையற்ற பயணங்களை தவித்தனர். பேருந்து போக்குவரத்து அனைத்து மாவட்டங்களிலும் முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஆனால் ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை வெகுவாக குறைந்ததால் குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான ரயில்கள் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இன்று ஆன்லைன் சேவைகள் செயல்படாது!!
ராமேஸ்வரம் தினசரி சிறப்பு ரயில் அதிகாலை 4.20 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். கொல்லம்-எழும்பூர் தினசரி சிறப்பு ரயில் கோவில்பட்டிக்கு இரவு 8.53 மணிக்கும், சாத்தூருக்கு இரவு 9.13 மணிக்கும் வரும். எழும்பூர்-தூத்துக்குடி சிறப்பு ரயில் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு காலை 6.40 மணிக்கு வந்தடையும். மேலும் எழும்பூர்- செங்கோட்டை சிறப்பு ரயில் காலை 8.25 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும். என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து திருப்பதி- ராமேஸ்வரம் செல்ல கூடிய சிறப்பு ரயில்களில் இடைப்பட்ட சில ரயில் நிலையங்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு ரத்து செய்யப்பட்ட ரயில்களும் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதன் படி எழும்பூர்- செங்கோட்டை சிறப்பு ரயில் காலை 8.25 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும். மேலும் தூத்துக்குடியிலிருந்து மைசூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் தினசரி மாலை 4.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். சாத்தூர் ரயில் நிலையத்திற்கு மாலை 6.03 மணிக்கு வரும். ஜூன் 18 முதல் ஒகா-தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் தூத்துக்குடி நிலையத்தை அதிகாலை 4.40 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.