சபரிமலை செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டும் வரப்போகும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும் டிசம்பர் . 3, 10 ,17, 24, 31, ஜனவரி 7, 10, 12, 14 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சபரிமலை:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவர், கேரளா,தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிவர் தற்போது கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5,000 பரிசு – அரசு அறிவிப்பு!
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அடிப்படையில் தினசரி 30,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் முலம் சுவாமி தரிசனம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்காக ஸ்பாட் புக்கிங் என்ற உடனடி டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் அடுத்தடுத்த நாட்களில் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதால் டிசம்பர் மாதம் முதல் தினசரி 50,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு முதல் அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
இந்த நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சென்னை சென்ரலில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. டிசம்பர் மற்றும் ஜனவரியில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக வும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச. 3, 10 ,17, 24, 31, ஜன. 7, 10, 12, 14 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் – காட்பாடி – சேலம் – கோவை வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.