தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கல்வி வளர்ச்சிகாக பல நல்ல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக மாநில அளவில் பயிற்சி நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு:
தமிழகத்தில் கொரோனா கால இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கும் வகையில் பல புதிய கல்வி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது கொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாமல் இருந்த காரணத்தினால் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக குறைய தொடங்கியது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்கும் விதமாக தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.இதை தவிர ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்வி திறனை அறிந்து வகுப்புகள் நடத்துவதற்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தனியொரு ஆளாக குடும்பத்தை காப்பாற்ற களமிறங்கும் பாரதி – அடுத்தது என்ன? லேட்டஸ்ட் ப்ரோமோ ரிலீஸ்!
மேலும் ஆசிரியர், மாணவர்களிடையே நல்ல புரிதல் ஏற்படும் விதமாக எவ்வாறு மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவைகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் இணை இயக்குநர்கள், முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு பணித்திறன் மேம்பாடு, தலைமை திறன், மேலாண்மை தொடர்பாக ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
Exams Daily Mobile App Download
அதன்படி, இந்த கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் ஆகஸ்ட் 22 முதல் 27-ம் தேதி வரை விருதுநகரில் நடத்தப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 7 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பயிற்சியில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர்கள் பயிற்சியில் தவறாமல் பங்கேற்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குநர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
பள்ளி வேலைகளை மட்டும் கவனித்தால் போதும் ஊரை உள்ளே விட்டு பள்ளிக்கூட நலனைக் கெ
டுக்காமல்.