தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி – நாளை (ஜன 27) ஏற்பாடு!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் நாளை (ஜன 27) ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகள்:
தமிழக அரசின் கீழ் ஏகப்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. அந்த பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தனியார் பள்ளிக்கு நிகரான கல்வி வழங்கவேண்டும் என்பதால் ஏகப்பட்ட திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் ஒரு சில நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த சில பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஏற்கனவே 1 முதல் 3 ஆம் வகுப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமீபத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பின் 4 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் முதல் கட்டமாக நாளை (ஜன 27) முதன்மை கருத்தாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மதுரையில் நடத்தப்பட இருக்கிறது. அதன் பின் இவர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.