கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி – 30 போலீசார் தேர்வு!!
தமிழகத்தில் காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவலர்கள் 30 பேருக்கு கோயம்புத்தூர் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சிறப்பு பணிக்குழு சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டன.
சிறப்பு பயிற்சி:
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தேர்வு செய்யப்பட்ட 30 காவலர்களுக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு பணிகுழு சார்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சி வகுப்பில் கோவையை சேர்ந்த போலீசார்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்த பயிற்சி வகுப்பு முடிந்ததும், தீவிரவாதிகளை ஒடுக்குவது, குற்றவாளிகளிடம் இருந்து பிணைக் கைதிகளை மீட்பது போன்ற ஒத்திகை சாகசங்கள் நடத்தப்பட்டன.
அரசு பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் விநியோகம் – டெல்லி அரசின் சூப்பரான அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இது அங்கிருந்த பலரை ஈர்த்தது. தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என சாகசம் செய்து காட்டப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் பார்வையிட்டார். பின் பயிற்சியில் இருக்கும் காவல்துறையினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவரே கவச உடைகளுடன் மூன்றாவது மாடியில் இருந்து கயிறு மூலம் இறங்கி சாகசத்தில் ஈடுபட்டார்.
அதன் பின் சிறப்பு பணிக்குழு சார்பில் நடைபெற்ற பயிற்சியின் முடிவில் இலக்கை நிர்ணயித்து சிறப்பாக செயல்பட்ட வீரர்களை காவல்துறை அதிகாரிகள் பாராட்டி, சவாலான பணிகளை எந்த சூழ்நிலையிலும் திறம்பட செய்யுமாறும் அவர்களை ஊக்குவித்தனர்.