தமிழகத்தில் நாளை (மார்ச் 5) சிறப்பு ரயில் இயக்கம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
ஹோலி பண்டிகையை முன்னிட்டு வட மாநிலங்களுக்கு திரும்பும் நபர்களுக்கு வசதியாக நாளை (மார்ச் 5) சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
சிறப்பு ரயில்கள்
பொதுவாக, பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது உண்டு. அந்த வகையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை (மார்ச் 5) சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் காலிப்பணியிடங்கள் – கல்வி, வயது, ஊதிய .. விவரங்கள் இதோ!
அந்த வகையில், தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான வட மாநிலத்தவர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக நாளை (மார்ச் 5) கோவையில் இருந்து பாட்னா வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலில் 10 முன்பதிவு பெட்டிகள் மற்றும் 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.