தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – சிறப்பு பொதுவிநியோக திட்டம் நீட்டிப்பு! அரசு அதிரடி!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக்கடைகள் மூலம் சிறப்பு பொது விநியோக திட்டம் மூலம் மானிய விலையில் சில பொருட்கள் வாங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சிறப்பு பொது விநியோகத்திட்டம்:
நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் மலிவு விலையில் பொருட்கள் வழங்கும் விதமாக நியாவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நியாவிலைக்கடைகளில் பொருட்கள் பெறுவதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரும்பாலான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.
அரசு பள்ளிகளுக்கு ஜனவரி 15ம் தேதி வரை விடுமுறை – உத்தரவு பிறப்பிப்பு!
அந்த வகையில் தமிழகத்தில் நியாவிலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்டவைகள் குறைந்த விலையில் அதாவது கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மலிவு விலையில் கிடைப்பதால் மக்கள் இதனை விரும்பி வாங்கி வருகின்றனர். அதனால் தமிழக மக்களிடையே சிறப்பு பொது விநியோக திட்டம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் இந்த திட்டத்தின் காலம் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022..!
அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது 2021 டிசம்பர் 31ம் தேதி முடிவடைந்து புதுவருடம் 2022 தொடங்கியுள்ளதால் சிறப்பு பொது விநியோக திட்டம் தொடருமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. மேலும் சிறப்பு பொது விநியோக திட்டத்தை நீட்டிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் மக்களின் நலன் கருதி மீண்டும் நடப்பு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இத்தகைய உத்தரவு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.