Post Office ல் மூத்த குடிமக்களுக்கான ஸ்பெஷல் திட்டம் – முழு விவரங்கள் இதோ!
போஸ்ட் ஆபீஸ் இல் மூத்த குடிமக்களுக்கு என்று பல சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தற்போது மூத்த குடிமக்களுக்கான ஸ்பெஷல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பலநலன்கள் கிடைக்கும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
ஸ்பெஷல் திட்டம்:
இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது அனைவரது வாழ்விலும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும் நடுத்தர மக்களுக்கு இந்த சேமிப்பு மிகவும் இன்றியமையாததாகும். போஸ்ட் ஆஃபிஸில் மூத்த குடிமக்கள் திட்டம், PPF திட்டம், மாத வருமானத் திட்டம்,தேசிய சேமிப்பு திட்டம் போன்ற பயனுள்ள திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வங்கிகளை போலவே போஸ்ட் ஆஃபீசிலும் லாபம் கிடைக்கக்கூடிய நிறைய திட்டங்கள் வரத் தொடங்கிவிட்டது. குறிப்பாக வயதான காலத்தில் எந்தவித ஆபத்தும் இன்றி வாழ நினைக்கும் அல்லது வரி சலுகைகளுடன் முதலீடு செய்ய நினைக்கும் மூத்த குடிமக்களுக்கு மூத்த குடிமக்கள் திட்டம், தேசிய சேமிப்பு திட்டம் போன்றவை நடைமுறையில் உள்ளன.
Exams Daily Mobile App Download
தற்போது இந்த திட்டங்களை தவிர மற்றொரு ஸ்பெஷல் திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் அறிமுகம் செய்துள்ளது. இது பழைய திட்டத்தை விட மிகவும் லாபகரமானதாகவும், நல்ல பலன் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. அந்த வகையில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 5 ஆண்டுகளுக்கான முதலீட்டு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சேமிப்பு கணக்கை வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் திறந்து கொள்ளலாம். இதில் ரூ.1000 முதல் அதிகபட்சமாக 15 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்திற்காக 7.4 % வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் செலுத்தப்படும். மேலும் 5 வருட நிலையான சேமிப்பு (FD) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.
இந்தியாவில் சிறு வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதத்தில் உயர்வு – முழு விவரம் இதோ
இதற்கான வட்டி தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு, என ஒட்டுமொத்தமாக பெறலாம். தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஆனால் பிரிவு 80 C இன் கீழ் வரிச்சலுகை ஒரு நிதியாண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரையில் மட்டுமே செலுத்த முடியும். இதை தவிர தனி நபர்களுக்கு அரசு தேசிய ஓய்வூதிய அமைப்பு என்ற ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பில் செயல்படும் பங்களிப்பு பிரிவு 80 CCD (1) இன் கீழ் ஒரு வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரையிலான விலக்கு பெறுவதற்கு தகுதி பெறுவது மட்டுமல்லாமல், பிரிவு 80CCD(1B) இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 50,000 வரை கூடுதல் வரி சலுகையும் கிடைக்கும் என்று இந்திய அஞ்சலக துறை தெரிவித்துள்ளது.