26 மாநிலங்களில் முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டம் – பிரதமர் துவக்கி வைப்பு!
கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய அனைவருக்கும் புதிய திட்டத்தினை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தினை இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் பிரதமர் துவக்கி வைத்துள்ளார்.
முன்களப் பணியாளர்கள்:
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா என்ற பெரும் தொற்று தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய் தாக்கத்தினால் தற்போது வரை இந்தியாவில் 3,83,490 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த கொடுமையான காலத்தில் தங்களது உயிரினை கூட பார்க்காது மக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர்.
கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிப்பு? நிபுணர்கள் விளக்கம்!!
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் காவலர்களை தான் முன்களப் பணியாளர்கள் என்று கூறுகிறோம். இவர்களுக்கு என்று அரசு பல சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. தற்போது அதில் ஒரு அம்சமாக பிரதமர் நரேந்திர மோடி முன்களப் பணியாளர்களுக்கு என்று ஒரு திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி காட்சி வாயிலாக அவர் துவக்கி வைத்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள 1 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக முன்கள பணியாளர்களுக்கு 6 வெவ்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 267 கோடி ரூபாய் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. திறன்மிக்க ஊழியர்களை சுகாதாரத்துறையில் இணைக்க இந்த திட்டம் பெரிதாக உதவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.