தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அதிரடி பரிசு – நியூயார்க் மேயர் அறிவிப்பு!
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பொதுமக்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு ஊக்குவிக்கும் விதமாக அதிரடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வெற்றிகரமாக தடுப்பூசிகளையும் கண்டுபிடித்தனர். முதலில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சப்பட்டனர்.
உலகளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட தலைவர் நரேந்திர மோடி – ட்விட்டர் தகவல்!
அதன் பின்னர், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்று தான் சிறந்த வழி என்பதை மக்கள் அறிந்து கொண்டனர். இதனால் பரவலாக அனைத்து தரப்பு வயதினரும் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதனால் தற்போது தடுப்பூசிக்கான தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி உற்பத்தியை நிறுவனங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டெல்டா வகையை சேர்ந்த தொற்று மீண்டும் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், தடுப்பூசி செலுத்தும் மக்களை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும் ஜூலை 30 முதல் செப்டம்பர் 2வது வாரத்திற்குள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்களுக்கு 100 டாலர் பரிசு வழங்க இருப்பதாக நியூயார்க் மேயர் டெ பிளாசியோ அறிவித்துள்ளார். செப்டம்பருக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு வாரந்தோறும் பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.