தமிழக பள்ளிகளில் கட்டணம் நிர்ணயிக்க சிறப்பு அதிகாரி – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களிலும் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான குழுவிற்கு தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு அதிகாரி நியமனம்:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத்தேர்வு நடத்தப்பட்டதால் மாணவர்களும் பதட்ட நிலையில் தான் தேர்வு எழுத சென்றனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதாக இருந்தது. பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நாளில் அதாவது ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 13ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெற்றதால் இந்த கல்வி ஆண்டு முழுக்க அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது எனவும், அதிகமாக கல்வி கட்டணம் வாங்கும் கல்வி நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் வரைக்கும் வாங்கலாம் என்பது குறித்தான அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூன் 18) மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!
இந்நிலையில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு தனியாக ஒரு அதிகாரியை நியமிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவிற்கு தனி அதிகாரியாக சென்னை மாவட்ட ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ். எம் மனோகரன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.