அரசு வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் – கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு!
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிரந்தர வைப்பு தொகையில் சலுகை வழங்கப்படும் என்று சில அரசு வங்கிகள் அறிவித்துள்ளன.
கொரோனா தடுப்பூசி:
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் சங்கிலியை உடைக்கும் பொருட்டு தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தகுதியுடைய மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில அரசு வங்கிகள் பல சலுகைகளை வழங்கி வருகிறது.
‘Error 503’ உலகளவில் பிரபல வலைதளங்கள் செயலிழப்பு – முடங்கிய இன்டர்நெட்!
அந்த வகையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வங்கி வாடிக்கையாளரின் நிரந்தர வைப்பு தொகையில் அதிக வட்டி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறுகிய கால சலுகையாக இருக்கும் என்றும் நிரந்தர வைப்பு தொகை 0.30 சதவிகிதம் வட்டி அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UCOVAXI-999 என்ற திட்டத்தின் கீழ் இந்த சலுகை வழங்கப்படுவதால் 999 நாட்களுக்கு வட்டி வழங்கப்படும் என்றும் இந்த சலுகை திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஏற்கனவே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியும் இதுபோல் Immune India Deposit Scheme என்ற திட்டத்தை தொடங்கி வழக்காமான வாட்டி விகிதத்தை காட்டிலும் கூடுதலாக 0.25 சதவிகிதம் இந்த சலுகை திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வட்டி விகிதத்தில் கூடுதலாக 0.50 சதவிகிதம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.