கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு சலுகை – மத்திய அரசு உறுதி!

0
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு சலுகை - மத்திய அரசு உறுதி!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு சலுகை - மத்திய அரசு உறுதி!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு சலுகை – மத்திய அரசு உறுதி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒவ்வொருவரது குடும்பத்தினருக்கும் உதவும் வகையில் சில முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு உறுதி தெரிவித்துள்ளது.

சிறப்பு சலுகை

கொரோனா 2 ஆம் அலையால் பாதிக்கப்பட்டு இதுவரை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் ஒவ்வொருவரது குடும்பத்துக்கும் உதவும் வகையில் சில முக்கிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. முன்னதாக நாடு முழுவதும் பேரலையாக உருவான கொரோனா 2 தொற்று காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அதிக பாதிப்பு உள்ள 11 மாவட்டங்களில் ஜெராக்ஸ் கடைகள் திறப்பு? அரசுக்கு கோரிக்கை!!

அந்த மனுவில், ‘நாடு முழுவதும் நோய் தொற்று பாதிப்பால் பலர் பலியாகியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த ஒவ்வொருவரது குடும்பத்துக்கும் இழப்பீட்டு தொகையாக 4 லட்சத்தை, மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12 ஆவது பிரிவின் கீழ் வழங்க வேண்டும் எனவும் இது பற்றி அனைத்து மாநில மற்றும் மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி அன்று நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த மனு தொடர்பாக மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,’கொரோனா பேரலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகளவு நிதியை செலவு செய்து வருகிறது. இதனால் கொரோனாவால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் இழப்பீட்டு தொகையாக 4 லட்சம் வழங்க முடியாது’ என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் மீண்டுமாக விசாரணைக்கு வந்தது.

TN Job “FB  Group” Join Now

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஒவ்வொருவரது குடும்பங்களுக்கும் உதவி செய்யும் வகையில், சில முக்கிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த பரிசீலனை முடிந்ததும் அறிவிப்புகள் வெளியிடப்படும் என கூறினார். இதை ஆலோசித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!