அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – மத்திய அரசின் புதிய அறிவிப்பு!
கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்த வகையில் தற்போது 3ம் அலையால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை 7 நாட்கள் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய அறிவிப்பு:
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு அதிகம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தொற்று பாதித்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பொது இடங்களில் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் கொரோனா இரண்டு தவணை தடுப்பூசிகளும் போட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்? தகவல் வெளியீடு!
வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண் 304 நாள்.17.06.2020-ன் படி, முதல் கொரோனா அலையின் போது அரசு ஊழியர் ஒருவர்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினருக்கு தொற்று பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு இருந்தாலோ, கொரோனா சிகிச்சை முடியும் வரை அவர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுமுறை 14 நாட்கள் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் எச்சரிக்கை!
இதனை தொடர்ந்து தற்போது மூன்றாம் அலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு 7 நாட்கள் என மத்திய அரசு புதிய அரசாணை அறிவித்துள்ளது. இந்த வகையில் தற்செயல் விடுப்பு முடிந்து பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் கொரோனா சிகிச்சை பெற்ற அறிக்கையின் நகல் அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வட்டார மருத்துவர் அளித்த சான்றையும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.