தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு விடுமுறை - சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு விடுமுறை - சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை என்று போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு மேலாண் இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

19ம் தேதி சிறப்பு விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளித்து அண்மையில் முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்தல் தினம் அன்று பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? பிரதமர் விளக்கம்!

இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்று அரசாணை வெளியாகி உள்ளது. இந்த வகையில் மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு (நிரந்தரப் பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் உட்பட) 19 ம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குநர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த விடுமுறை வரும் 19ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த தலைமை அலுவலகம், பிரிவு அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் வாக்களிக்க ஏதுவாக அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு மீண்டும் அமல்? அரசு திடீர் விளக்கம்! புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

மேலும் வாக்களிப்பு ஆரம்ப நேரத்திலிருந்து முடியும் நேரம் வரையில் உள்ள முறைப் பணிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று அத்தியாவசிய பணியை முன்னிட்டு பணிபுரியும் பணியாளர்களுக்கு நடைமுறையில் உள்ளவாறு கூடுதல் ஊதியம் வழங்கப்படும் மற்றும் போக்குவரத்து பொது சேவை எந்த விதத்திலும் பாதிக்கா வண்ணம் செயல்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!