தமிழகத்தில் வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் கூறியுள்ளார்.
முக்கிய அறிவிப்பு:
பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து, உறுதிமொழி ஏற்க வேண்டும். கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதை அனைத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் வருடம்தோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஏப்.24 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு எடுக்கும் முடிவு என்ன?
தற்பொழுது கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 24-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை இயக்குநர் பிரவின் டி நாயார் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் , தேசிய அளவிலான பஞ்சாயத்து ராஜ் தினம் ஏப்ரல் 24-ம் தேதி கொண்டாடப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கிராம சபை கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும் உறுதிமொழி எடுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் அமலாக உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சரின் பேட்டி!
கிராம சபை கூட்டம் நடத்தபட்டதற்கான விவரங்களை ஒன்றிய அமைச்சகத்தின் meetingonline.gov.in என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கிராமசபா கூட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே, வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை 24.4.2022. அன்று நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கை, எடுத்திடவும் கூட்டம் நடைபெற்றமைக்காண அறிக்கையினை தொடர்புடைய கிராம ஊராட்சிகளிடமிருந்து பெற்று, இவ்வியக்ககத்திற்கு 30.4.2022-குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் கிராம சபை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.