அரசு ஓய்வுதாரர்களுக்கான சிறப்பு வசதி – அஞ்சல் துறை அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பின் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள தபால்காரர்கள் மூலமாக மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என சென்னை முதன்மை அஞ்சல் அதிகாரி பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார்.
மின்னணு உயிர்வாழ் சான்றிதழ்:
அரசு ஊழியர்கள் பணி காலம் முடிந்த பின் ஓய்வூதியம் பெற ஆண்டுதோறும் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக உயிர் வாழ் சான்றிதழ் வழங்குவதில் இருந்து விலக்கு அளித்து இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து 7.15 லட்சம் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உயிர்வாழ் சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால் வயது மூப்பு காரணமாக இந்த சான்றிதழ்களை நேரில் சென்று சமர்ப்பிக்க பெரும் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் அரசு ‘ஜீவன் பிரமான்’ திட்டம் மூலமாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்’ வங்கி மூலமாக ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக , ‘பயொமெட்ரிக்’ முறையை பயன்படுத்தி மின்னணு உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான சேவை கட்டணமாக ரூ70ஐ அந்தந்த பகுதி தபால்காரர்களிடம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் ஓய்வூதியதாரர்கள் அவர்களிடம் ஆதார், மொபைல் போன் எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விபரங்கள் போன்றவற்றை கொடுத்து கை விரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தபால்காரர் மூலமாக மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என சென்னை முதன்மை அஞ்சல் அதிகாரி பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார்.