தமிழகத்தில் நாளை பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் – 12ம் வகுப்பு முடித்தால் போதும்!
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்களுக்கு என்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்க உள்ளது. வேலைவாய்ப்பை நோக்கி காத்திருக்கும் பெண்கள் இதில், கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் தற்போது அதிக அளவிலான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசு பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு வேலைவாய்ப்பு துறை சார்பில் மாவட்டம் தோறும் அடிக்கடி ஏற்பாடு செய்யப்படுகின்றது. இதேபோல், தனியார் துறை நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் அடைவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு துறை சார்பில் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் அவர்கள், மாவட்டத்தின் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 29ம் தேதியாகிய நாளை காலை 9 மணிக்கு பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார். கடந்த 2020, 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த முகாமில் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
phD படிப்பில் சேர விரும்புவர்கள் கவனத்திற்கு – AICTE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.16,557 சம்பளமாகவும், இதை தவிர உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.