தமிழகத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்பு இயக்கம் – அரசு அதிரடி!
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் ஒரு இயக்கம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு இயக்கம்:
தமிழகத்தில் தற்போது 10 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதாவது, கடந்த சில மாதங்களாகவே குழந்தைகள் காணாமல் போவது, சரியான பராமரிப்பின்றி குழந்தைகளை தவிக்க விடுவது. அதனால் சிறு வயதிலேயே குழந்தைகள் மரணமடைவது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமற்போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு இயக்கம் நடத்துவதற்கு தமிழக அரசின் முடிவு செய்திருக்கிறது.
சன் டிவி சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் இது தான் – வெளியான TRP பட்டியல்!
மேலும், இந்த சிறப்பு இயக்கம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் டாக்டர். சி சைலேந்திரபாபு அனைத்து நகரத்திலும் உள்ள காவல்துறை ஆணையர்களுக்கு ஒரு ஆணையாக வெளியிட்டுள்ளார். மேலும், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல் பெண் மற்றும் 18 வயதிற்கு கீழ் பட்ட குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், சீண்டல்கள் ஆகியவற்றையும் இந்த சிறப்பு இயக்ககம் மூலமாக கண்காணிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.