தமிழகத்தில் மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் வசதி – அரசு ஏற்பாடு!
நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தை சார்ந்த நீட் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பாக சிறப்பு கவுன்சிலிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் வசதி:
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. கிட்டத்தட்ட 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் நீட் தேர்வை எழுதினர். தமிழகத்தை பொறுத்த வரைக்கும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர். குறிப்பாக, கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு கூடுதலான மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியை சார்ந்த 17,567 பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர். பெரும்பாலும், நீட் தேர்வை மாணவர்கள் பெரிய லட்சியத்துடன் எழுத செல்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இதில், தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்கிற பயத்திலேயே பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது போன்ற தற்கொலைகள் இனிமேல் நிகழாமல் தடுக்க அரசின் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, தமிழகத்தை சார்ந்த 1,42,286 நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, அனைத்து மாணவர்களுக்கும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு மாணவர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல மனநல ஆலோசகர் மூலமாக கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (ஜூலை 18) தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும், இந்த நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதற்கென்றே சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே போல மனநல ஆலோசகர் மூலமாக நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு இரண்டு, மூன்று முறை கவுன்சிலிங் வழங்கப்பட்டது. மேலும், அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வை எழுதியுள்ள மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டின் படி 555 மாணவர்களுக்கு பல் மருத்துவம் தொடர்பான படிப்பு பயில ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. தற்போது நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.