தமிழகத்தில் மே 8ம் தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

0
தமிழகத்தில் மே 8ம் தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் மே 8ம் தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் மே 8ம் தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். மேலும் தடுப்பூசி என்பது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கையை மக்கள் கைவிடக் கூடாது என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்:

நம் அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், 2019 டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, 2020 ஜனவரியில் நம் நாட்டிலும் பரவத் தொடங்கியது. இரண்டரை ஆண்டுகளாக உலகையே முடக்கிப் போட்டுள்ள இந்த கொடூர வைரஸ் பரவலால், உலக பொருளாதாரம் சரிவை சந்தித்தது. கொரோனா 3 அலைகளுக்கு பின், தொற்று பரவல் குறையத் தொடங்கியது. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இரண்டு, ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுள்ளதை அடுத்து, தொற்று பாதிப்பின் தீவிரம் மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில், மத்திய – மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்தன. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவை மாநில அரசுகள் கைவிட்டன. சுய விருப்பத்தின் அடிப்படையில் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது.

ExamsDaily Mobile App Download

சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்து வந்தாலும், நாட்டில் பல்வேறு பகுதிகளில் மெல்ல அதிகரிக்கும் போக்கை காண முடிகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்தியா மட்டும் அல்ல சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களில் பலர் வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். வடமாநிலங்களில் இருந்து தொழில் புரிய வந்தவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 13% அகவிலைப்படி (DA) உயர்வு – யாருக்கெல்லாம் பலன்? முழு விவரம் இதோ!

இதையடுத்து டெல்லி, உத்திரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்றார். மேலும் வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மீண்டும் பரவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைள் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார். வரும் 8ம் தேதி மாநிலம் முழுவதும் மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். அன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். இரண்டாவது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 1.46 கோடி பேர் சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!