தொழிலக பணியாளர் உணவு தயாரிப்பிற்கு சிறப்பு குழு – சுகாதார இயக்குநர் அறிவுறுத்தல்!
தொழிற்சாலை பணியாளர்களுக்கு நிர்வாகத்தின் தயாரிப்பில் உணவு அளிக்கப்படும் நடைமுறை உள்ளது. தொழிற்சாலை பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
உணவு பாதுகாப்பு:
நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் பணியாளர்களுக்கு உணவு அங்கேயே சமைத்து கொடுக்கப்படுகிறது. அதிக அளவிலான உணவு சமைக்கப்படுவதால் கவனக் குறைவாக சில விஷயங்கள் நடந்து விடுவதும் உண்டு. இதனால் தொழிலாளர்கள் நலம் பாதிக்கப்படுகிறது. மேலும், உணவு வழி தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் செயல்பட தொழிற்சாலை உணவகங்களின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் நேற்று சென்னையில் நடந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த உணவு தயாரிப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூடத்தில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் தலைமை ஏற்று பேசினார். அப்போது, தொழிற்சாலை பணியாளர்களுக்கு தயாரிக்கப்படும் உணவுகளை சுகாதார மற்றும் பாதுகாப்பு கோட்பாடுகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டும். மளிகை பொருட்களை சேமிக்கும் இடங்கள், சாப்பிடும் இடம், சமைக்கும் இடங்களில் பூச்சி, எலி போன்றவை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு அறிய வாய்ப்பு – நவ.18ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!
Follow our Instagram for more Latest Updates
தரமான பொருட்களை வைத்து சமைக்க வேண்டும், புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், சமையலறை போதிய வசதிகளுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் இடங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு நிபுணர் குழுவை வைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.