பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், விரைவில் அட்டவணை – அமைச்சர் செங்கோட்டையன்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் இன்று கூறியுள்ளார்.
பொதுத்தேர்வுகள்:
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த கல்வியாண்டில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
மருத்துவ உளவியலில் எம்ஃபில் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – மருத்துவ கல்வி இயக்குனரகம்!!
அதுமட்டுமின்றி 1 முதல் 9ம் வகுப்பு வரை எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்பதை முதல்வருடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் எனவும், பூஜ்ய கல்வியாண்டாக இது இருக்காது எனவும் அமைச்சர் கூறி இருந்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.
மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!
ஏற்கனவே இன்னும் 10 நாட்களுக்குள் செய்முறை தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்து இருந்த நிலையில், சிறப்பு வகுப்புகளுக்கு முதல்வரிடம் அனுமதி பெற்று விரைவில் அதற்கான அட்டவணை வெளியிடப்படும் என இன்று கூறி உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்