தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கார்டில் உள்ள குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்!
ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கவோ, நீக்கவோ, புதிய ரேஷன் கார்டு பெறவோ விரும்பினாலோ அதற்கான அனைத்து சேவைகளையும் செய்து தர மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற இருக்கிறது.
ரேஷன் அட்டை:
ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் அவசியமானது. ரேஷன் கார்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை உடனே சரி செய்துகொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல் ரேஷன் கார்டில் பெயரை நீக்குதல், பெயரை சேர்த்தல் ஆகிய அனைத்தையும் சரியாக செய்துகொள்ள வேண்டும். ரேஷன் அட்டை தாரர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்த அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. ரேஷன் கார்டில் பெயரை மாற்றம் செய்வது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இந்த முகாமின் மூலமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஹாப்பி நியூஸ் விரைவில் அறிவிப்பு?
இந்த மாதத்திற்கான மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், வீட்டு முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு பதிவு செய்வது அல்லது மொபைல் எண் மாற்றம் செய்வது, புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதுமட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வர முடியாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட அட்டைதாரர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கவும் அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்தாலோ அல்லது ரேஷன் பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது குறித்தான புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.