சென்னையில் இருந்து வேளாங்கன்னிக்கு சிறப்பு பஸ்கள் – மாதா கோவில் திருவிழா!
தமிழகத்தில் உள்ள பிரபலமான கிறிஸ்தவ தலமான வேளாங்கன்னி மாதா கோவிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக திருமணம் நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
மாதா கோவில் திருவிழா:
தமிழகத்தில் நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த திருவிழா 10 நாள் நடைபெற இருக்கும் நிலையில் அதன் முக்கிய நாளாக 8ஆம் தேதி வேளாங்கன்னி மாதா பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவை காண தமிழகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் செல்வது வழக்கம். ஒரு சிலர் நேர்த்திக்கடன் வைத்து சொந்த ஊரில் இருந்து நடைபயணமாக வருவார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கன்னிக்கு பஸ், கார் மூலமாக ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர வேளாங்கன்னிக்கு 27 ஆம் தேதி 25 பஸ்களும் 28 ஆம் தேதி 25 சிறப்பு பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறுகையில், சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் 2 நாட்கள் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மக்களின் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம். மேலும் சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது என தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்