தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாளை முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து வெளி ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் வீடு திரும்பும் நோக்கில் 1450 பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் அறிவித்துள்ளார்.
பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் / கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தற்போது கோடை விடுமுறை முடிந்து மாணவர்களுக்கு நாளை (ஜூன் 13) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
SBI வங்கியில் 32 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
முதற்கட்டமாக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரித்து வருவதால் வகுப்பறைகள், கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஏராளமான மாணவர்கள் கோடை விடுமுறைக்கு வெளி ஊர்களுக்கு சென்றுள்ளதால் அவர்கள் வீடு திரும்பும் நோக்கில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல / திரும்பி வர கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பதை முன்னிட்டு மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக 1450 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.