தமிழகத்தில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு – மதுரை போக்குவரத்து மண்டலம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட போக்குவரத்து மண்டலம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிறப்பு பேருந்து:
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அதே போல நடப்பு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை முதல் ஜனவரி 17 ம் தேதி காணும் பொங்கல் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஜன. 14 போகி பண்டிகை – சென்னை மாநகராட்சி பிறப்பித்த முக்கிய உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
இந்த விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதனால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும். இதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் பயணம் செய்ய ஏதுவாக தமிழக போக்குவரத்து துறை சார்பாக கூடுதல் மற்றும் சிறப்பு பேருந்துகள் இந்த விடுமுறை நாட்களில் இயக்கப்படும்.
அந்த வகையில் தற்போது மதுரை மண்டலம் வாயிலாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஜனவரி 12 ,13, 14 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து 250 பேருந்துகளும் திருச்சியில் இருந்து 135 பேருந்துகளும் திருப்பூரிலிருந்து 80 பேருந்துகளும் கோவையில் இருந்து 280 பேருந்துகளும் திருநெல்வேலியில் இருந்து 35 பேருந்துகள் என மொத்தமாக தமிழகம் முழுவதும் 615 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல விடுமுறைக்கு பிறகு மீண்டும் வசிப்பிடத்திற்கு வர 625 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.