ஆயுத பூஜைக்கு வெளியூர் செல்லும் சென்னைவாசிகள் கவனத்திற்கு – தற்காலிக வழித்தடங்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துத்துறை அதிக எண்ணிகையில் பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும் சென்னையில் 3 இடங்களில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையம்:
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் அனைத்து அரசு பேருந்துகளும் பணிமனைகளில் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அரசின் முயற்சியால் தொற்று குறைந்து வந்ததும் மக்களின் போக்குவரத்து தேவைக்காக மாவட்டங்களுக்குள்ளேயே பேருந்துகள் இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வரின் பெண்களுக்கு அரசு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்ற அறிவிப்பால் பேருந்துகளில் பெண் பயணிகளின் வருகை அதிகரித்தது.
TNPSC குரூப் 2, 2A தேர்வு அறிவிப்பு 2021 – காலிப்பணியிடங்கள்! கல்வித்தகுதி & சம்பளம்!
அடுத்தடுத்த நாட்களில் மக்களின் வசதிக்காக அதிக எண்ணக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் வெளியூர்களில் வேலை செய்ய கூடிய மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர். இவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது. மாநில விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சென்னையில் 12.10.2021 மற்றும் 13.10.2021 ஆகிய தினங்களில் 3 இடங்களில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
கோயம்பேடுலிருந்து பயணிகள் சிறப்பு பேருந்து நிலையங்களை அடைய எம்டிசி சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இயக்கக்கூடிய பேருந்துகள் குறித்த அட்டவணையையும் வெளியிடப்பட்டுள்ளது. தொற்று பரவும் இந்த நேரத்தில் பேருந்து பயணிகள் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும். கட்டாயம் சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.