சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 17,000 பேர் தங்கும் பிரமாண்ட அறைகள் ஏற்பாடு!
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜை விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை:
கேரளாவில் உள்ள சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து மலையேறி ஐயப்பனை தரிசிக்க வந்த வண்ணம் இருப்பர். அந்த வகையில் நடப்பு ஆண்டு கார்த்திகை மாத விரதம் தொடங்கி விட்டது. தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.
2 மாத சம்பளம் & மருத்துவக்காப்பீடுடன் 150 ஊழியர்கள் பணி நீக்கம் – பிரபல நிறுவனம் அதிரடி!
Exams Daily Mobile App Download
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பக்தர்களின் வருகையை முன்னிட்டு தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் கோவிலில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஒரே நேரத்தில் 17,017 பேர் தங்கும் அளவில் பிரமாண்ட அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் இங்கு தங்கி ஓய்வு எடுக்கலாம் என்று சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.