பகுதி நேரமாக M.Phil முடித்தவரக்ளுக்கு ஊக்க ஊதியத்தொகை
தமிழகத்தில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஊக்க ஊதியம் அவர்களின் படிப்பிற்கேற்ப வழங்கப்படும். அதன் படி M.Phil முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தற்போது தணிக்கை அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது, தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டம் பெற்றிருந்தால் அவர்களுக்கு முதலாவது ஊக்க ஊதியமும், M.Phil பட்டங்கள் பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதியமும் வழங்கப்படுவது வழக்கம்.
தொலைதூரக்கல்வியில் பயின்றவர்களுக்கு மட்டும் இதில் இருந்து இதில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை நடத்தப்பட்டு சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் தாங்கள் பெற்று வந்த ஊக்க ஊதியதினை அரசிடம் திரும்ப செலுத்தும் படி உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் அதிகபட்சம் 12 லட்சம் வரை திரும்ப செலுத்த வேண்டியதாக இருந்ததால் இது யுஜிசி விதிமுறைகளுக்கு எதிரானது என முதல்வரின் தனிக்குழுவிற்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது.
தற்போது முதல்வரின் தனிக்குழு ஆனது கடந்த 2007-2008 முதல் முறையாக ஊக்க ஊதியம் பெற்று வரும் ஆசிரியர்கள் அதனை திரும்ப செலுத்த தேவை இல்லை என்று தணிக்கை அலுவலகத்திற்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவினால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |