இந்தியாவில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு சிறப்பு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு!

0
இந்தியாவில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு சிறப்பு அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு சிறப்பு அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு சிறப்பு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழாவை ஒட்டி மத்திய அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் நாட்டின் நினைவு சின்னங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட இலவச அனுமதி வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுதந்திர தினம்:

ஆகஸ்ட் 15 தேதி ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் முக்கிய தினமாக கருதப்படுகிறது. ஏனென்றால் அன்று தான் நம் நாடு ஆங்கிலேயர்களின் கொடுமையான ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டது. அதாவது 1947 ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. இந்த சுதந்திரம் சாதாரணமாக கிடைத்துவிடவில்லை பல தியாகிகள், போராட்ட வீரர்களின் அயராத முயற்சியாலும் அவர்களின் உயிர் தியாகத்தாலும் கிடைத்த சுதந்திரமாகவும். அதன் காரணமாகவே ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் நாளை நாம் அனைவரும் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம்.

Exams Daily Mobile App Download

இந்தியா சுதந்திரமடைந்த அரை நூற்றாண்டுகளையும் கடந்து நாம் சுதந்திரமாக இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் அது சுதந்திரத்திற்காக தங்களது உயிரையே தியாகமாக தந்த வீரர்களையே சேரும். இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது தொற்று குறைய தொடங்கி இயல்பு நிலை திரும்பி உள்ளதால் 75 வது சுதந்திர தின விழாவை மிக சிறப்பாக கொண்டாட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNTET தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் & தேர்வுமுறை குறித்த விவரங்கள்

அந்த வகையில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. நமது நாடு சுதந்திரம் அடைந்ததன் நினைவாக பல நினைவு சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் சுதந்திர தியாகிகளின் நினைவாக அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி தொல்லியல் தளங்கள், சுற்றுலா தளங்கள் பேணி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை ஒட்டி ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாட்டின் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள், சுற்றுலா தளங்கள் போன்றவற்றை பார்வையிட பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!