ஜூன் 1 முதல் தென்மேற்குப் பருவமழை துவக்கம் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
மே 27ம் தேதி துவங்க இருந்த தென்மேற்குப் பருவமழை இப்போது ஜூன் 1 முதல் ஆரம்பிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. மேலும் இந்த பருவமழை தற்போது இலங்கை மற்றும் கேரளாவை நோக்கி முன்னேறுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை:
அடுத்த 48 மணி நேரத்தில் தென் அரேபியக் கடலின் சில பகுதிகள், மாலத்தீவுகள், லட்சத்தீவு மற்றும் கொமோரின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. அந்த வகையில் தென்மேற்குப் பருவமழை வியாழன் அன்று தென் இலங்கையை உள்ளடக்கிய கேரளாவின் சில பகுதிகளை நோக்கி நீடிக்கத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இது குறித்த அறிக்கைகளின்படி, கேரளாவின் சில பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் அடுத்த இரண்டு நாட்களில் தென் மாநிலம் மற்றும் லட்சத்தீவுகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கேரளாவில் பருவமழையின் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை மே 27ம் தேதி தொடங்கும் என்று வானிலை மையம் முன்பு தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது தென்மேற்குப் பருவமழை கேரளாவில் ஜூன் 1 முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 6 நாட்கள் விடுமுறை! பட்டியல் இதோ!
இதற்கிடையில் இந்தியாவின் வடமேற்கு பகுதிகள் வறண்டு கடுமையான வெப்ப அலைகளின் பிடியில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே வேளையில் தென் தீபகற்பத்தில் அதிக மழை பெய்து வருவதால் மார்ச் 1 முதல் இந்தியாவில் 3 சதவீதம் அதிக மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் மார்ச் 1 முதல் வடமேற்கு இந்தியாவில் 65 சதவீதமும், மத்திய இந்தியாவில் 39 சதவீதமும் மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே போல கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 27 சதவீதம் அதிக மழையும், தென் தீபகற்பத்தில் 76 சதவீதம் அதிக மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.