இன்று தொடங்கும் தென்மேற்கு பருவ மழை – வானிலை ஆய்வு மையம்!!
கேரளாவில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளது. இந்த வருடம் சற்று தாமதமாக தொடங்குகிறது. ஜூன் 3 இன்று பிற்பகுதியில் மழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை:
இந்தியாவில் ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவமழை பொழியும். இந்த நான்கு மாதங்களும் பல பகுதிகளில் பரவலாக மழை பொழியும். தென்மேற்குப் பருவமழை நாட்டில் அதிக மழை பொழிவை தருகிறது. விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது தென்மேற்கு பருவமழை காலம் நிலவுகிறது. வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ம் தேதி பருவமழை தொடங்கும். யாஸ் புயல் காரணமாக இந்த வருடம் மழை தாமதமாகியுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவ மழை 2 நாள்கள் தாமதமாக ஜூன் 3 ம் தேதி தொடங்கியுள்ளது. இன்று கேரளாவில் பிற்பகுதியில் தொடங்குவதற்கு அனைத்து சாதகமான சூழலும் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு – மாநில அரசுகளின் முடிவுகள் !!
வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஜூன் 8 முதல் 10-ஆம் தேதி வரை பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்குப் பருவமழை காலத்தில் கடந்த 1961 முதல் 2010-ஆம் ஆண்டு வரை பதிவான மழை அளவின்படி, ஆண்டுக்கு சராசரி மழை அளவு 88 செ.மீ ஆகும். தென்னிந்திய பகுதிகளில் மழை அளவு 93 சதவீதம் முதல் 107 சதவீதம் வரை இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.