தமிழகத்தில் ஜூன் 26 முதல் ரயில் சேவை தொடக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா அச்சம் சற்று குறைந்து வருவதால் வருகிற 26ம் தேதி முதல் 8 சிறப்பு ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் சேவை:
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாத இறுதி வாரம் முதல் கொரோனா அச்சம் காரணமாக ரயில் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது. பின் நாளைடைவில் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றி ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் கொரோனா அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் ஜூன் 28க்கு மேல் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் – எவற்றுக்கெல்லாம் அனுமதி?
ஊரடங்கு காலத்தில் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக தெற்கு ரயில்வே பல வழித்தடங்களில் இயங்கி வந்த சிறப்பு ரயில்களை ரத்து செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அச்சம் குறைந்து வருவதால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஜூன் 26ம் தேதி முதல் 8 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், திருப்பதி – சென்னை சென்ட்ரலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06204) ஜூன் 26ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரல் – திருப்பதிக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06203) வருகிற ஜூன் 26 முதல் இயக்கப்படுகிறது. பாவ்நகர் – கொச்சுவேலிக்கு வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (09260) வருகிற ஜூலை 29ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் கொச்சுவேலி – பாவ்நகருக்கு வியாழக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூலை 1ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது. இதுபோன்ற மேலும் 4 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படவுள்ளது.