தெற்கு ரயில்வேயில் 3000+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாள்!
Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே துறை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, 3134 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 31.10.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள்:
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ITI, 12TH, 10TH முடித்திருக்க வேண்டும்.
- Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Freshers ஆக இருப்பின் 29.09.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 22 வயதிற்குள் உள்ளவராகவும், Ex-ITI, MLT ஆக இருப்பின் 29.09.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை மாத உதவித் தொகையாக கொடுக்கப்படும்.
- Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி இறுதியாண்டில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு Merit list என்னும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 31.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.