தமிழகத்தில் 12 ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் பயணிகளின் வருகை குறைந்ததால் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் ரத்து:
கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளையும், விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் புதிய நிலையை அடைகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தனிநபர் இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் மூலமாக நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
இதனை தொடந்து மத்திய, மாநில அரசுகள் பகுதி நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்குகளை அமல்படுத்தியுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்கவே இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் நடமாட்டம் சற்று குறைவாகவே உள்ளது.
மே 2ம் தேதி முழு ஊரடங்கு இல்லை – மாநில அரசு அறிவிப்பு!!
இதனால் ரயில் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. ஏற்கனவே தெற்கு ரயில்வே சில சிறப்பு ரயில்களை ரத்து செய்தது. மேலும் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை இல்லாததால் தெற்கு ரயில்வே தற்போது 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்