ரயில் பயணிகள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியீடு!
ரயில்வே தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில் சேவை செய்வதாக தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது இந்த சேவை தொழில்நுட்ப காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. இது பயனாளர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தெற்கு ரயில்வே:
மத்திய அரசின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் RRB NTPC CBT முதல் நிலை தேர்வுகள் போன வருடம் நடைபெற்றது. அதற்கான இரண்டாம் கட்ட தேர்வு ஜூன் 12ம் தேதி நடத்தபட உள்ளது. அதனால், அதற்கான நுழைவு சீட்டும் இணையத்தில் வெளியிடப்பட்டது.
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூன் 11 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை!
இந்த தேர்வை வெளியூரில் இருந்து தேர்வு எழுதுவோருக்கு வசதியாக சிறப்பு ரயில் சேவை செய்து தரப்படுவதாக அறிவித்திருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு, கடந்த 09.06.2022 அன்று நெல்லூர் முதல் சேலம் மற்றும் சேலம் முதல் நெல்லூர் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், தொழில்நுட்ப காரணங்களுக்காக எந்தெந்த ரயில்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
1. அதன்படி, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சேலம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லூர் முதல் சேலம் சிறப்பு ரயில் (வண்டி எண் 07675) சனிக்கிழமை காலை 7.05 மணிக்கு கிளம்பி கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மதியம் 3.15 மணி அளவில் சேலம் சென்றையும் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2. அதுமட்டுமின்றி மறுமார்க்கத்தில் சேலம் முதல் நெல்லூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 07676) ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர் வழியாக சென்று மறுநாள் அதிகாலை 5.30 மணி அளவில் நெல்லூர் சென்றடையும் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
குறிப்பு: இதனால் தேர்வுக்கு தயாராகுபவர்கள் அனைவரும் முன் ஏற்பாடாக வேறு ரயில்களிலோ அல்லது பேருந்துகளிலோ முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.