இன்று முதல் குருவாயூர், கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
இன்று முதல் குருவாயூர் எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்க தொடங்கியுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது அதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.
ரயில் சேவை:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. ஆனால் பொது முடக்கத்தில் இருந்து ரயில் சேவைக்கு விலக்கு அளிக்கப்பட்டு வருவதால் ரயில் சேவைகள் தொடர்ந்து தமிழகத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து வெகுவாக காணப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சுமார் 25 சிறப்பு ரயில்களை வருகிற ஜூலை மாதம் 1ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதேபோல் கடந்த நாட்களாக பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதை அடுத்து தடை காலம் முடிந்து இன்று முதல் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் மீண்டும் இயங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி ரயில் எண் 06321 நாகர்கோவில் – கோயம்புத்தூர் தினசரி சிறப்பு ரயில், 06322 கோயம்புத்தூர் -நாகர்கோவில் சிறப்பு ரயில், 02627 திருச்சி – திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில்.
நாட்டிலேயே பச்சை பூஞ்சை நோயால் முதல் நபர் பாதிப்பு – ஷாக் ரிப்போர்ட்!
02628 திருவனந்தபுரம் சென்ட்ரல் – திருச்சி சிறப்பு ரயில், 06605 மங்களூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில், 06606 நாகர்கோவில் – மங்களூர் சிறப்பு ரயில், 06127 சென்னை எழும்பூர் – குருவாயூர் ஆகிய சிறப்பு ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயங்கும் என்றும் மறுமார்க்கத்தில் இருந்து 06128 குருவாயூர் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் நாளை முதல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.