தமிழகத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வரும் காரணத்தால் மாநிலத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்:
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வந்ததால் பல சிறப்பு ரயில்கள் மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சிறப்பு ரயில்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது இது தொடர்பாக தெற்கு ரயில்வே முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வானொலி மூலம் பாடங்கள் – பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு!
அதன்படி ஜூலை 11 முதல் நியூ டெல்லி – புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் (04072) ஞாயிறு தோறும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ஜூலை 14 ஆம் தேதி முதல் புதுச்சேரி – நியூ டெல்லி வாராந்திர சிறப்பு ரயில் (04071) புதன்கிழமை தோறும் இயக்கப்படவுள்ளது. வரும் ஜூலை 9 முதல் கன்னியாகுமரி – ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா சிறப்பு ரயில் (06317) வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படவுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் இன்று (ஜூலை 5) முதல் நான்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – மைசூரு சதாப்தி சிறப்பு ரயில் (06081) மற்றும் மைசூரு – எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் சதாப்தி சிறப்பு ரயில் (06082) இயக்கப்படவுள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – கோவை சிறப்பு ரயில் (06029) மற்றும் கோவை – எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06030) ஆகிய ரயில்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.