சென்னை டூ பெங்களூரு செல்ல திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் பயணிகள் வருகை குறைவால் ரத்து செய்யப்பட்ட சென்னை – பெங்களூர் செல்லக்கூடிய சதாப்தி அதிவிரைவு ரயில்கள் வரும் 21ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மீண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கம் :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பொது பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு மக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டது. ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தொற்று பரவும் அச்சத்தால் ரயில்களில் பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.
இலவச விடுதி வசதியுடன் M.Phil., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை – உலக தமிழாராய்ச்சி நிறுவனம்!
பயணிகள் இன்றி ரயில்கள் இயக்கப்பட்டால் ரயில்வே துறை பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவே தெற்கு ரயில்வே பணிகள் வருகை குறைவால் முக்கிய சிறப்பு ரயில்களை ரத்து செய்தது. மேலும் காலநிலை காரணமாகவும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் ரயில்களில் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மற்ற ரயில்களை தொடர்ந்து வரும் 21ம் தேதி முதல் பெங்களூரு-சென்னை சதாப்தி அதிவிரைவு ரயில்கள் வரும் 21ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதே போல் சித்தரோடு சுவாமி உப்பள்ளி-எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படவுள்ளது. மேலும் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்- சித்தரோடு சுவாமி உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து வருகிற 22ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.