தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கில் ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே விளக்கம்!!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவுக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிவேகமாக உள்ளதால் வரும் ஏப்ரல் 20ம் தேதியான நாளை முதல் இரவு 10 மணி தொடங்கி காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை மட்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அச்சம் – மத்திய நிதியமைச்சர் விளக்கம்!!
கட்டுப்பாடுகள்:
நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000க்கும் மேல் உள்ளது. தமிழக அரசு ஊரடங்கு காலத்தில் உணவகங்கள், தேநீர் விடுதிகள், தனியார், பொது போக்குவரத்து போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு காலை 6 மணி முதல் பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இரவு 10 மணிக்குள் சென்று சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து:
தமிழகத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணம் குறித்து மக்களிடம் கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில், தெற்ற்கு ரயில்வே நிர்வாகம், தமிழகத்தில் இரவு ஊரடங்கு நேரத்திலும் ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும், அனைத்து பகுதிகளிலும் ரயில்கள் முழுமையாக இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்