ரயில்வே துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றவருக்கு பணிவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!
தென்மேற்கு ரயில்வே கடந்த சில வாரங்களுக்கு முன் Goods Train Manager பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Goods Train Manager பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு (25.04.2022) நாளையுடன் கால அவகாசம் நிறைவடைவதால், தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ரயில்வே துறையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Goods Train Manager பதவிக்கு என்று மொத்தமாக 147 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாகத் தெரிவித்தது.
- இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- 01.01.2022 அன்றைய நாளின்படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணிக்கு ஏற்றாற்போல் அரசு ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது என்று அறிவித்துள்ளது.
- Computer Based Test (CBT) , Document Verification மற்றும் Medical Examination ஆகியவற்றில் தேர்ச்சியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
Railway விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசின் ரயில்வே துறை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க (25.04.2022) நாளையுடன் கால அவகாசம் நிறைவடைவதால் உடனே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.