ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – தெற்கு ரயில்வே தகவல்!
இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களுக்கும் முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு
இந்தியாவில் 2 வருடங்களுக்கு பிறகு தற்போது ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ரயில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு முன் பதிவில்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் IRCTC பயணிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் IRCTC இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் உங்களின் போட்டிங் பாயின்டையும் மாற்றி கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை!
அதனை தொடர்ந்து பயணிகள் தங்களின் குறைகளை தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் ரயில் நிலையம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். அத்துடன் தற்போது உணவுகளை வாங்கும் போது க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை தொடர் 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இயங்கும் ரயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சேலம் ரயில் நிலையத்தில் இருந்து நூல், பனியன், பட்டு வேஷ்டி, சேலை, இருசக்கர வாகனம், கொசுவலை உள்ளிட்டவை புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றை அனுப்ப நாளை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு அனுப்பபட்டு வரும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பிறகே ரயில்களில் ஏற்றப்படுகிறது.